Saturday, March 31, 2012

யாழ் கொலவெறி எதிர்ப்பலை


தனுஷின் கொலவெறி பற்றி பலர் பேசிக் கொண்டிருக்க, "எந்தவொரு பாடலாக இருந்தாலும் கொஞ்சமாவது அர்த்தமும், பொருளும் இருக்க வேண்டும். ஆனால் இவை எதுவுமே இல்லாதது 'ஒய்திஸ் கொலவெறி டி...' பாடலாகத்தான் இருக்க முடியும்." என மொழி ஆர்வலர்கள், உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்து இந்தப் பாடல்.

“தமிழ்மொழியை இழிவுபடுத்தும் இந்தப் பாடல் இடம்பெரும் படத்தை மானமுள்ள எந்த தமிழனும் பார்க்கக் கூடாது” என்றெல்லாம் அறிக்கை விட்டார்கள். நேற்று 3 படமும் வெளியாகிவிட்டது. விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.

"தமிழ்நாட்டுகாரர்களுக்கு கொலை வெறி பிடித்துள்ளது. அதனால் தான் அவர்கள் இன்று கொலை வெறி கொலை வெறி என பாடல்களில் கூட பாடுகின்றனர். இந்தக் கொலை வெறி பாடலுக்கு எமது யாழ்ப்பாண இளைஞன் பதிலடி கொடுத்து பாடியுள்ளார். அந்தப் பாடலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்." என இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பியான அஸ்வர் பேசினார்.


Friday, March 30, 2012

கொலவெறி கொலைக்க்ஷன்




தனுசின்  ‘சூப்’ பாடல் ஒலக பிரசித்தி பெற்றமை எல்லாம் பழைய செய்தி. ஆனால் அதன் பாதிப்பில் உருவான படைப்புகள், வீடியோக்கள் பல அதற்கு நிகராயிருந்தன.  கொலவெறி பாடலுக்கு பதிலாகவும் பல படைப்புகள் வந்திருந்தாலும், சில மட்டுமே சொல்லும் படியாக இருந்தன.
நான் சிலவற்றை இங்கு சேர்த்திருக்கிறேன்.


Saturday, March 24, 2012

இலங்கையின் உத்தியோகப் பற்றற்ற தூதுவர்கள் அமெரிக்கா வந்துள்ளார்கள்

1930ஆம் ஆண்டு இலங்கையின் வல்வெட்டித்துறையில் இருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டி தமிழர்கள் சென்ற போது, ”இலங்கையின் உத்தியோகப் பற்றற்ற தூதுவர்கள் அமெரிக்கா வந்துள்ளார்கள்” என ‘போஸ்டன் குளோப்’ செய்தி வெளியிட்டிருந்தது.


வ.உ சிதம்பரம்பிள்ளை மட்டுமல்ல வல்வை மக்களும் அமெரிக்காவிற்கு கப்பலோட்டினார்கள். வல்வை சுந்தரமேஸ்திரியார் என்பவரால் நேர்த்தியாக அமைக்கப்பட்ட இரட்டைப் பாய்மரக் கப்பல் கிட்டத்தட்ட 82 ஆண்டுகளுக்கு முன் வல்வையில் இருந்து குளோஸ்ரர் துறைமுகம் வரை சிறப்பாக சென்றடைந்தது.

இன்னும்