Wednesday, October 20, 2010

ஆதி - கோடி கோடியாய், முடிவில்லாமல்

எனக்கு அதை சொல்லத் தெரியவில்லை.

மல்லிகை, முல்லை, அல்லி …. என வெவ்வேறு பூக்களாய்ப் பூத்ததாக தெரியவில்லை. அத்தனையும் தாமரையாய் இருந்தன.

பூத்தன பூத்தன புவனம் பதின்நான்கயும் தாண்டிப் பூத்தன. முதலில் ஆயிரம் கோடி பூத்தன, பின்னர் கோடியின் கோடியாய் பூத்தன. முடிவில்லாமல் பூத்தன, முடிவிலியிலும் பூத்தன.


Tuesday, October 5, 2010

மன்மதன் அம்பு


வா
எடு
தொடு
விடு

அம்பை அல்ல
அன்பை, அன்பம்பை

மார்பைத் துளைக்கட்டும்
சோர்வைக் கலைக்கட்டும்

வீரம் தளைக்கட்டும்
வெற்றி முளைக்கட்டும்

இன்பம் விளையட்டும்
வாழ்வு களை கட்டும்

2004-02-02
2:40 PM

இன்னும்